search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பற்களை பிடுங்கிய விவகாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டை கைது செய்யக்கோரி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
    X

    பற்களை பிடுங்கிய விவகாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டை கைது செய்யக்கோரி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

    • பல்வீர்சிங்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பல்வீர்சிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

    இதற்காக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் நாளை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பல்வீர்சிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், நிர்வாகிகள் யாசிர் அலி, திலிபன், கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    திராவிடர் தமிழர் கட்சி திருக்குமரன், இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மண்டல நிர்வாகி கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இது தொடர்பாக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×