search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது: 30-ந்தேதி சின்னங்கள் ஒதுக்கீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது: 30-ந்தேதி சின்னங்கள் ஒதுக்கீடு

    • சிதம்பரத்தில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நாளை மனுதாக்கல் செய்கிறார்.
    • காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்த தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நல்ல நாளான நேற்று மனுதாக்கல் செய்து உள்ளனர். அதிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட் பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் 80 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்து உள்ள நிலையில் மற்ற வேட்பாளர்கள் நாளை (புதன் கிழமை) மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கி உள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சியிலும் நேற்று முக்கிய பிரமுகர்கள் மனுதாக்கல் செய்திருந்தாலும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நாளைதான் மனு தாக்கல் செய்கிறார். சிதம்பரத்தில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நாளை மனுதாக்கல் செய்கிறார்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நேற்று வரை 405 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும்.

    மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் அந்த சின்னம் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் முடிவு செய்து வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு சின்னங்களை ஒதுக்கும். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகே இந்த பணிகள் வருகிற 30-ந்தேதி நடைபெறும்.

    இதனால் சின்னம் கிடைக்காமல் சில வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலையும் உருவாகி உள்ளது.

    Next Story
    ×