என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜாபர் சாதிக் போதைப்பொருள் குடோனில் அதிகாரிகள் சோதனை
- குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை:
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லியில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியாக செயல்பட்ட சதா என்கிற சதானந்தம் என்பவரை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அவருக்கு சொந்தமான போதைப்பொருள் குடோன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்தும் போதைப்பொருட்கள் பொட்டலம் போடப்பட்டு கடத்தப்பட்டு உள்ளன.
இதையடுத்து மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான போதைப்பொருள் குடோனுக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இங்கிருந்து எந்தெந்த வழிகளில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டது? அதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் மூலம் குடோனில் பணி புரிந்தவர்களையும், ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுப ட்டவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்