search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணமான 40 நாளில் மாயம்- இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்
    X

    திருமணமான 40 நாளில் மாயம்- இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

    • கடந்த 3-ந்தேதி புதுமண தம்பதி இருவரும் பபிஷாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.
    • திருமணம் ஆன பிறகும் முன்பு காதலித்த வாலிபருடன் பபிஷா சுற்றி திரிந்துள்ளார்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்த பபிஷா (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த 3-ந்தேதி புதுமண தம்பதி இருவரும் பபிஷாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பபிஷாவை விட்டு விட்டு, விஷ்ணு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அன்று மாலையில் சென்று பார்த்தபோது பபிஷாவை காணவில்லை. இதுகுறித்து அவரது தாயாரிடம் கேட்டபோது, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

    தனது மனைவி மாயமானது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் விஷ்ணு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பபிஷாவை அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னை சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் இருந்த பபிஷாவை போலீசார் மீட்டனர். அவருடன் தங்கியிருந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பதும், அவருடன் திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பபிஷாவுக்கு பழக்கம் இருந்ததும், அதில் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை காதலித்ததும் தெரிய வந்தது.

    இந்நிலையில் மற்றொரு வாலிபருமான விஷ்ணுவை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன பிறகும் முன்பு காதலித்த வாலிபருடன் பபிஷா சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் தான் திருமணம் முடிந்த 40-வது நாளில் கணவரை தவிக்க விட்டு விட்டு காதலனுடன் பபிஷா ஓட்டம் பிடித்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பபிஷாவை போலீசார் மார்த்தாண்டத்திற்கு அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×