search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகள்
    X

    நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகள்

    • தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
    • வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×