என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்

- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையிலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. ஆனால் பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு மழையும் நின்றதால் எதிர்பார்த்தபடி 142 அடியை நெருங்காமல் தாமதமானது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.95 அடியாக உள்ளது. வரத்து 762 கன அடி. திறப்பு 750 கன அடி. இருப்பு 7653 மி.கன அடி. அணையின் நீர்மட்டம் 142 அடியை இன்று மதியத்திற்குள் எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு இடுக்கி மாவட்டத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படும். இதனை தவிர்க்க தற்போதே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரையிலும் அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலேயே நிலைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு மீண்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63.40 அடியாக உள்ளது. வரத்து 506 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1769 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடி குறைக்கப்பட்டு 1269 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4296 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 27 கன அடி.
பெரியாறு 1.4, தேக்கடி 13, கூடலூர் 2.4, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 2.6, ஆண்டிபட்டி 17, வீரபாண்டி 2.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
