என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருவண்ணாமலை அருகே தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை
- விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.
- விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் விஜய் (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.
இதனால் விஜய் மன உளைச்சலில் காணப்பட்டார். நேற்று இரவு வீட்டின் அறையில் திடீரென விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு கொண்டதும், மகன் இறந்தது தெரியாமல் தாயார் தூக்கு போட்டுக்கொண்டதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்