search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை உலக சிக்கன நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    நாளை உலக சிக்கன நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது.
    • சேமிப்பு எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும்.

    சென்னை:

    உலக சிக்கன நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக்டோபர் 30-ம் நாள், ஆண்டுதோறும் "உலக சிக்கன நாள்" என கொண்டாடப்படுவதை குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன் வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும்.

    சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதை சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலம் தங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிந்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×