search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக

    • பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.
    • வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா, படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * திமுக ஆட்சிக்கு வந்தபின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    * பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.

    * கனிமொழியைப்போல அமைச்சர் கீதாஜீவனும் சிறப்பாக செயல்படுகிறார்.

    * மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கேயே இருந்தார்.

    * உடைந்த பாலங்களை எல்லாம் சரிசெய்த பிறகே அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார்.

    * அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருவாரம் நெல்லை, தூத்துக்குடியில் தங்கி இருந்தார்.

    * 258 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டன. உடைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய ரூ.15 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    * தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம். இன்றுகூட கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

    * மலேசியா, சிங்கப்பூர் நிறுவனங்களும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன.

    * தொழிற்சாலைகள் தொடங்கப்படும்போது தென் மாவட்ட இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.

    * கொரோனா பாதிப்பின்போது ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினோம்.

    * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி உள்ளோம்.

    * பாதிக்கப்படும்போது மட்டும் அல்லாமல் இறுதி வரை துணை நிற்போம்.

    * கால்நடைகள், பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கினோம்.

    * சிறு வணிகர்களுக்கு கடனுதவித் தொகை வழங்கப்படுகிறது.

    * கால்நடைகளை இழந்தோருக்கு தனிநபர் கடனுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளோம்.

    * சாலைகளை சீரமைக்க ரூ.343 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * சேதம் அடைந்த படகுகள், வலைகள், மீன்பிடி இயந்திரங்களுக்கு நிவாரணம் வழங்கி உள்ளோம்.

    * அரசு ஆவணங்களை இழந்தோருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    * வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    * 2 பெரிய பேரிடர்களுக்காக ரூ.37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டோம். சாதுர்யம் இருந்தால் நீங்களே சமாளிக்க வேண்டியதுதானே என்கிறார்கள்.

    * உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக என்று கூறினார்.

    Next Story
    ×