search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.1191 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    ரூ.1191 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    • விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய த்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட ப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா, 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் தொடக்க விழா மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மகளிர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு த்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திக்கேய சிவ சேனாதிபதி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து 2 முறை உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தந்துள்ளது தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் மாநகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் நிகழ்ச்சிகள் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    Next Story
    ×