search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

    • 25-ந்தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றம் காவல் இன்று வரை நீட்டிப்பு
    • எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

    சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 25-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்றம் காவல் ஆகஸ்ட் 28-ந்தேதி வரை (இன்று) நீட்டிக்கப்பட்டது.

    அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7-ந்தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது, அதன்படி 12-ந்தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×