search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு
    X

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு

    • பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.
    • ஏ.டி.எம். மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. மிகப்பெரிய பேருந்து நிலையமாக இருந்தபோதிலும், போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்யப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்திமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.

    ஏ.டி.எம். மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    Next Story
    ×