search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு- பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேர் கைது
    X

    கைதான பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காணலாம்.

    அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு- பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேர் கைது

    • நெல்லை வரும் அமைச்சர் கீதாஜீவனுக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக மானூர் பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.
    • நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் 40-க்கும் மேற்பட்டோர் அந்த தனியார் மண்டபத்திற்குள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதற்கிடையே, தூத்துக்குடியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் அவதூறாக பேசியதாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நெல்லை வரும் அமைச்சர் கீதாஜீவனுக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக மானூர் பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மானூரை சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மாவட்ட செயலாளர் முத்தையா, பிரசார குழு தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் வெள்ளைத்துரை உள்ளிட்ட 4 பேரை மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதை அறிந்த நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் 40-க்கும் மேற்பட்டோர் அந்த தனியார் மண்டபத்திற்குள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×