search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?
    X

    ராமேசுவரத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?

    • ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்து மிடம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று இரவு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று வந்தது. அதில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4-க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் வந்து இறங்கியதாகவும், அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலீசாரின் வருகை குறித்து அறிந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். ஆனால் அவர்கள் வந்த கார் கோவில் வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ளது. இந்த காரில் என்னென்ன பொருட்கள் என்பது தெரியவில்லை.

    ராமேசுவரத்தில் பணியாற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி. பிரிவு போலீசார் உள்ளூர் போலீசார் தப்பிச்சென்ற மர்மநபர்கள் எங்கு பதுங்கியுள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? அல்லது கஞ்சா, தங்கம் போன்ற கடத்தல் பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×