என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1178 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது.
இந்தநிலையில், நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 715 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1178 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 103.59 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Next Story






