என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்
    X

    மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்

    • கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும்.
    • வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் முதல் மெட்ரோ ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும்.

    கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×