search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு
    X

    தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு

    • சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

    மதுரை:

    தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மத நல்லிணக்க நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுவதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் "மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30" என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

    அதில் மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×