search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு- ஈரோடு நபருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்
    X

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு- ஈரோடு நபருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

    • ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிப் முசாப்தீனை கடந்த மாதம் 16ம் தேதி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. போலீசாரின் கோரிக்கையை ஏற்று 10ம் தேதி வரை இரண்டு நாட்கள் ஆசிப் முசாப்தீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்திற்கு ஆசிப் முசாப்தீனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×