என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 3 டி.எம்.சி.யை தாண்டியது
- செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் 7 ஆயிரத்து 776 மில்லியன் கன அடி (77 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மாதம் முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும் பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து திறக்கப்படும் என்பதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் 3 டி.எம்.சி.யை தாண்டி தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்றும், குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 565 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 3,080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கன அடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 132 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,075 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வருகிறது. 176 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 441 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்