search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கு வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    கொடநாடு வழக்கு வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    • கொடநாடு வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    • வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல் காதர் விடுமுறையில் சென்றதால், இன்று இந்த வழக்கு ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐடி போலீசார் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 10 பேரும் ஆஜராகாததால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறும்போது, வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அரசு தரப்பில் சேகரித்த தடயங்கள் குறித்தும், சம்பவம் நடந்த இடங்கள் குறித்து 2 தரப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளதால் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

    Next Story
    ×