என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை முதல்நாளில் 1,563 பேர் எழுதவில்லை
    X

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை முதல்நாளில் 1,563 பேர் எழுதவில்லை

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 832 பேரில் 270 பேர் தேர்வுக்கு வரவில்லை.
    • அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 455 பேரில் 711 பேர் தேர்வு எழுத வராமல் இருந்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 997 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் முதல் நாள் தேர்வில் இந்த 3 மாவட்டங்களில் மொத்தம் 1563 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 832 பேரில் 270 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 ஆயிரத்து 350 பேரில் 582 பேர் தேர்வு எழுதவில்லை.

    அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 455 பேரில் 711 பேர் தேர்வு எழுத வராமல் இருந்து உள்ளனர்.

    மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வராதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேரில் கேட்டறிய திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமனிடம் கேட்டபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 711 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம்.

    தேர்வு எழுதாத மாணவர்களை வருகிற ஜுன் மாதத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்க வைக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஜூலை மாதத்தில் அந்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேரும் வகையில் தேர்வு எழுத தயார்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.

    Next Story
    ×