என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போடி அருகே ஜல்லிக்கட்டு காளை வேட்டையாடி கொலை
- மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார்.
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோவில் செல்லும் சாலையில் காகம்பாறை மலையடிவாரப்பகுதி உள்ளது. போடி கரட்டுப்பட்டியை சேர்ந்த பவுன்பாண்டி என்பவர் தான் வளர்த்து வந்த 2 நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு பயிற்சி அளிப்பதற்காக இங்குள்ள தனது உறவினர் வீட்டு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று பயிற்சிக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜல்லிக்கட்டு மாடு மாயமானது. இதனைதொடர்ந்து அந்த மாட்டை பவுன்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மாடு மலைஉச்சியில் மாந்தோப்பு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பவுன்பாண்டி குரங்கனி போலீசில் புகார் அளித்தார். மாடு கட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு காணவில்லை.
மேலும் அதன் சதை பகுதி முற்றிலும் எடுக்கப்பட்டுள்ளது. கயிறு எரிந்த நிலையில் உள்ளது. எனவே இந்த மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாட்டின் இறைச்சி பகுதி வெட்டி எடுக்கப்பட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அது கொலை செய்யப்பட்டது தெரியவரவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்