search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.73 அடியாக உயர்வு
    X

    நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.73 அடியாக உயர்வு

    • ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.
    • நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 1500 கன அடியாக வந்த நிலையில் நேற்று 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 1500 கன அடியாக வந்த நிலையில் நேற்று 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 1804 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 103.73 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×