என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் சூறை: கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை நேற்று மாலை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதனை அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறி ஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். திடீர் சாலை மறியலால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்