என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்தனர்.
- கொள்ளை சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பூங்காநகர் ஆவாரம் பூ தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்தனர்.
இந்த நிலையில் கேசவனின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் டி.வி., ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






