search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் கனமழை: தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு
    X

    கனமழைக்கு அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.

    பழனியில் கனமழை: தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    Next Story
    ×