search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எதிரொலி: பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கனமழை எதிரொலி: பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பெய்து வந்த பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
    • முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பெய்து வந்த பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.

    dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×