search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரியில் சுகாதாரப் பணியாளர்கள் 4 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களை படத்தில் காணலாம். 

    தருமபுரியில் சுகாதாரப் பணியாளர்கள் 4 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

    • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சுகாதார ஒப்பந்த பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ. 610 ஊதியமாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை மற்றும் இதர தொகைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதனை சுகாதாரப் பணியா ளர்கள் ஏற்று க்கொள்ள வில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என போரா ட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இன்று தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×