search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
    X

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

    • பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதி தொப்பம்பட்டி பிரிவு, கோத்தாரி நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 38). இவர், கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார். அவற்றை எடுத்துச் சென்றபோது அந்த மாணவிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×