என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரியபாளையத்தில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்- 3 பேர் கைது
    X

    பெரியபாளையத்தில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்- 3 பேர் கைது

    • சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பெரியபாளையம் பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொடுத்த தகவலின்படி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் போலீசாருக்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பெரியபாளையம் பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் பெரிய மூட்டையுடன் வந்த மோட் டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொடுத்த தகவலின்படி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக புது குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்டர் பவுடர் ராஜ், பெரியபாளையம் பளையகாரர் தெருவை சேர்ந்த சவுகத் அலி, தண்டலம் அருகே உள்ள பருத்தி மேனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×