search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி மோசடி- மளிகை கடைக்காரர் கைது
    X

    தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி மோசடி- மளிகை கடைக்காரர் கைது

    • நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர்.
    • கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.

    திருப்பூர்:

    திருப்பூர் செரங்காடு பகுதியில் கடந்த 15 வருடங்களாக தங்கி மளிகை கடை நடத்தி வந்தவர் குமார். இவர் அப்பகுதி பொதுமக்களிடம் மாத மற்றும் வார தவணை அடிப்படையில் பலகார சீட்டு நடத்தி வந்தார்.

    நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர் . வாரம் தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணைத் தொகை கட்டி வந்தனர். குமாரிடம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடி வரை பணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் தலைமறைவான குமாரை தேடிவந்தனர். அப்போது குமார் குடும்பத்துடன் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×