என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது: ரெயில்கள் தாமதம்
Byமாலை மலர்11 Dec 2023 1:21 AM GMT (Updated: 11 Dec 2023 2:19 AM GMT)
- 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டது.
- 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் செங்கல்பட்டு அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டது. 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. அதை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விபத்து காரணமாக ரெயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரெயில்கள் சிங்கம்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X