search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜபாளையத்தில் செல்போன் கடையில் கஞ்சா விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
    X

    ராஜபாளையத்தில் செல்போன் கடையில் கஞ்சா விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது

    • கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி (வயது 24), அங்கு வேலை பார்த்த சூர்யா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.

    Next Story
    ×