search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
    X

    சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் 20வது ஆண்டு விளையாட்டி போட்டி நடந்தது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில 20-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பா.சிம்மசந்திரன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொது செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×