search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசுகள் விற்பனை- 25 சதவீதம் தள்ளுபடி
    X

    சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசுகள் விற்பனை- 25 சதவீதம் தள்ளுபடி

    • சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசு, புத்தாடை வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 800 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன.

    தனியார் இடங்களில் பட்டாசு கடை வைக்க சொத்து வரி கட்டிய ரசீது அவசியம் தேவை. அது உள்பட 30 விதிகளை பின்பற்றி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு துறையினர் நேரில் சென்று பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்கி வருகிறார்கள்.

    சென்னை மாவட்டத்தில் நேற்று வரை 600 விண்ணப்பங்களுக்கு பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீவுத்திடலில் சிவகாசியில் உள்ள 20 முன்னணி நிறுவனங்கள் "ஸ்டால்" அமைத்து உள்ளன.

    தீபாவளிக்காக 21-ந் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்க வருபவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடியில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த பட்டாசு விற்பனையை அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் விக்கிரமராஜா ஆகியோர் இன்று தொடங்கி வைக்கிறார்கள்.

    தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனையை முன்னிட்டு கண்காணிப்பு கேமரா, உணவகங்கள், கார் பார்க்கிங் வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீவுத்திடலில் எந்த கடையில் பட்டாசு வாங்கினாலும் ஒரே விலையில்தான் கிடைக்கும் என்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    பட்டாசு கடை இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால் தீவுத்திடலில் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×