search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள்- எந்திரங்கள் எரிந்து நாசம்
    X

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள்- எந்திரங்கள் எரிந்து நாசம்

    • திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
    • தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து பல அடி தொலைவுக்கு கரும்புகை எழுந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவா்கள் திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×