search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    X

    பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    • மளமளவென பரவிய தீ குடோனில் இருந்த பழைய பொருட்கள் குடோனில் இருந்த எந்திரங்கள் மீது பற்றி எரிய தொடங்கியது.
    • விண்ணை முட்டும் அளவுக்கு சூழ்ந்துள்ள கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசடையும் சூழல் நிலவி உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி என்னும் இடத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது.13 வருடங்களாக பிரபு இந்த குடோனை நடத்தி வருகிறார்.

    பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பைப்புகள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குடோனுக்கு அருகே கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ள குடிசை பகுதியில் இருந்து இன்று காலை 9 மணி அளவில் தீ பரவியது.

    மளமளவென பரவிய தீ குடோனில் இருந்த பழைய பொருட்கள் குடோனில் இருந்த எந்திரங்கள் மீது பற்றி எரிய தொடங்கியது. பின்னர் குடோன் முழு வதும் பரவி அனைத்து பொருட்களும் எரிய தொடங்கியதால் கடும் புகைமூட்டம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. மேலும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன் சுமார் 10.கி.மீ., தூரம் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 5 தண்ணீர் லாரிகளை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விண்ணை முட்டும் அளவுக்கு சூழ்ந்துள்ள கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசடையும் சூழல் நிலவி உள்ளது.

    Next Story
    ×