search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகை பெட்டி தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து
    X

    நகை பெட்டி தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

    • தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.
    • 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகை பெட்டி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குடோன் முழுவதும் பரவிய தீ, அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    குடோனில், சமையல் எரிவாயு சிலிண்டரும் பயன்பாட்டில் இருந்துள்ளது. 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×