search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆண்டுகளில் விபத்தில் சிக்கிய 2 லட்சம் பேரை மீட்டு நிதி உதவி- அமைச்சர் தகவல்
    X

    2 ஆண்டுகளில் விபத்தில் சிக்கிய 2 லட்சம் பேரை மீட்டு நிதி உதவி- அமைச்சர் தகவல்

    • 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
    • திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை விரைந்து மீட்டு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல் மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.

    இதன்படி மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்படுபவர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க 237 அரசு மற்றும் 455 தனியார் என 692 ஆஸ்பத்திரிகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். 2 லட்சமாவது பயனாளி குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் சென்று இருந்தார்.

    Next Story
    ×