search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாங்குநேரி அருகே காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
    X

    நாங்குநேரி அருகே காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

    • சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    • கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த தன்மணியன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.

    இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சிவா(வயது 8) என்ற மகனும், சிவானி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி சிறுமி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் சிறுமிக்கு ஊசி போட்டுள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடல்நிலை சற்று தேறிய நிலையில், கடந்த 29-ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கிளீனிக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி திடீரென மயக்கம் போட்டு விழுந்து இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊசி போட்டதில் பக்க விளைவு ஏற்பட்டு சிறுமி இறந்தாரா? அல்லது காய்ச்சல் பாதிப்பால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×