என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வெங்கலில் போலி டாக்டர் கைது
- ராமச்சந்திரன் பி.யூ.சி மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன.
- அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல், நேரு பஜாரில் "பாரத் கிளினிக்" என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தவர் ராமச்சந்திரன் (வயது71).
இவர் பி.யூ.சி மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ராமச்சந்தி ரனின் ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ராமச்சந்திரன் முறையான மருத்துவம் ஏதும் படிக்காமல் பி.யூ.சி. மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வெங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் ராமச்சந்திரனை கைது செய்தனர். அவர் கடந்த 15 ஆண்டுக்கு மேல் அவர் மருத்துவம் பார்த்து வந்து உள்ளார். இதனால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்