என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை நாளை ரத்து
- சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் (எண்:42831) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை 9.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் (எண்: 42836) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாளை இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு 23-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்