என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பறக்கும்படை சோதனை: காய்கறி வியாபாரியிடம் ரூ.1,27,000 பறிமுதல்
    X

    பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பணம்.

    பறக்கும்படை சோதனை: காய்கறி வியாபாரியிடம் ரூ.1,27,000 பறிமுதல்

    • நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது.
    • மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ரூ.1,27,780 பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை. மதுரை கடச்சநேந்தலைச் சேர்ந்த மாரிமுத்து என்ற அந்த நபர்தான் ஒரு காய்கறி வியாபாரி என்றும் மொத்தமாக மதுரையில் இருந்து காய்கறிகள் வாங்கி விற்று வருவதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×