search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு
    X

    இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
    • இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை சென்னை வருவதாக இருந்தது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் இதற்காக இன்று மாலை சென்னை வருவதாக இருந்தது.

    மாவட்ட கலெக்டர்கள் காவல் துறை அதிகாரிகளுடன் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க இருந்தனர்.

    ஆனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் கூட்டத்தை வேறொரு நாளில் நடத்துமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

    Next Story
    ×