search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்மையை வணங்குவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து
    X

    பெண்மையை வணங்குவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

    • பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களை காணுகின்ற போது மனம் பேர் உவகை கொள்கிறது.
    • பெண்மையால் பெருமை கொள்வோம்!

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வு க்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் வருகிற 8-ந் தேதி "சர்வ தேச மகளிர் தினமாக" கொண்டாடப்படு கிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனை வருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக புரட்சித் தலைவி அம்மா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது.

    பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்!

    பெண்மையை வணங்கு வோம்!

    பெண்மையால் பெருமை கொள்வோம்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×