search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஹவாலா பணப்பரிமாற்ற கும்பலுடன் ஜாபர்சாதிக்குக்கு தொடர்பு?: தரகரிடம் தீவிர விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஹவாலா பணப்பரிமாற்ற கும்பலுடன் ஜாபர்சாதிக்குக்கு தொடர்பு?: தரகரிடம் தீவிர விசாரணை

    • சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
    • ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 4 பேரும் கைதாகியுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலமாக ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது.

    இது தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாபர்சாதிக்கை ஏற்கனவே அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜாபர்சாதிக் மீதான போதைப்பொருள் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

    இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று ஜாபர்சாதிக் உள்பட கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களை அவர்கள் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஹவாலா பணப்பரிமாற்ற தரகர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அதன் பின்னணி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×