என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
- நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை கழகம் சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மத்திய மாவட்டம் நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ், 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர், 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர் மற்றும் 7-வது வார்டை சேர்ந்த மாநகர தி.மு.க. பிரதிநிதி மணி என்ற சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருந்தது. அந்த கூட்டத்திற்கு மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் வரவில்லை என கூறி தற்போது நீக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்கள் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






