search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரச்சலூரில் நடமாடிய சிறுத்தை பெருந்துறை பகுதிக்கு இடம் பெயர்ந்ததா?- வனத்துறையினர் விளக்கம்
    X

    அரச்சலூரில் நடமாடிய சிறுத்தை பெருந்துறை பகுதிக்கு இடம் பெயர்ந்ததா?- வனத்துறையினர் விளக்கம்

    • இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பழைய பாளையம், ஊஞ்சப்பா பாளையம், வெள்ளி வலசு, வேமண்டாம் பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன் காடு, அட்டவணை அனுமன் பள்ளி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக மாடு, கன்றுக்குட்டி, ஆடு உள்ளிட்டவற்றை மர்ம விலங்கு கொன்று வந்தது. வனத்துறையினர் ஆய்வில் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் அல்லது அந்தியூர் பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை பிடிக்க 7 இடங்களில் கூண்டு , 13 இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதேப்போல் வனப்பகுதிக்கும் கால்நடைகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் பெருந்துறை அடுத்த கொங்கம்பாளையத்தில் ஒரு பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை இழுத்து சென்றது. அத்துடன் அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் சிறுத்தை நடமாட்டமும் பதிவாகி இருந்தது. இதனால் அரச்சலூரில் நடமாடிய சிறுத்தை தற்போது பெருந்துறை பகுதிக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.

    ஒன்றரை மாதத்துக்கு முன் கொங்கம்பாளையம் பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்கு கொன்றது. அதன் பின் விலங்கு நடமாட்டம் இல்லை. இருந்தாலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.

    அப்போதுதான் சிறுத்தை என உறுதி செய்து 7 இடங்களில் கூண்டு வைத்தோம். அதற்குள் பெருந்துறை பகுதிக்கு அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து ஆட்டை வேட்டையாடியதுடன் வனத்துறை வைத்துள்ள கேமிராவை கடந்து சென்றுள்ளது. இவை 2-ம் ஒரே சிறுத்தை என யூகித்துள்ளோம். இதனால் இப்பகுதிகளிலும் கூடுதலாக கூண்டு வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×