search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்போனுடன் கூடிய திருஷ்டி பொம்மை- சாத்தான்குளம் அருகே சுவாரசியம்
    X

    செல்போனுடன் கூடிய திருஷ்டி பொம்மை- சாத்தான்குளம் அருகே சுவாரசியம்

    • செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    இன்றைய நவீன காலத்தில் மாணவர்கள், வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அந்த வகையில் செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் வழக்கமாக திருஷ்டி பொம்மையோ அல்லது தடியங்காயில் திருஷ்டி பொம்மையின் படம் வரைந்து வைப்பது வழக்கம்.

    ஆனால் இங்கு அந்த கட்டிட உரிமையாளர் ஒரு திருஷ்டி பொம்மையை தயார் செய்து, பொம்மை கையில் செல்போனுடன் பேசிக் கொண்டிருப்பது போல வடிவமைத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    Next Story
    ×