என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி அருகே பரவும் டெங்கு காய்ச்சல்
- ரத்தம் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
- 20- கும் மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குப்பட்ட உப்பளம் பரிக்கப்பட்டு, கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இங்கு கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது ரத்தம் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 20- கும் மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காய்ச்சல் பரவிவரும் பகுதியில் கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தெருவிலும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






